கனாக் காலம் அது

பள்ளிப்பருவம் பத்தாம் வகுப்பு
பள்ளி செல்லும் வேளையிலும்
வீட்டுக்கு வரும்வேளையிலும்
குழந்தைகள் மனதில் குழப்பம்
ஏனெனில் ஆண்கள் பெண்கள்
பாடசாலைகள் இரண்டும் ஒரே நேரம்தான்
பிள்ளைகள் வீடு திரும்பும்நேரம்
அதனால் பிள்ளைகள் சந்திக்க தகுந்தநேரம்

ஒவ்வொரு பிள்ளையின் மனமும்
தூய்மையானது துன்பம் துயரம் அறியாதது
அந்த இளமை அரும்பும் அழகிய நாட்களில்
தங்கள் வாழ்வில் ஏதோ ஒன்றை இழந்து விட்ட உணர்வு
அதுதான் எண்ணங்கள் வண்ணங்களாய்
இறக்கை முளைத்து இலேசாகிப் பறக்கும் நேரம்

யாருக்கும் யாரையும் அனுபவமில்லை
இருந்தும் ஒருவர் மனம் ஒருவரை நினைத்து
மனதிற்குள் ஏங்கும் ரசிக்கும் காலம் அது
துன்பமின்றி துயரமின்றி தூய வெள்ளை மனங்கள்
காணும் இனிய கனாக் காலம் அது
அந்த நாள் நல்ல நாள்தான் அந்த நாட்கள் இனி வருமா/

ஒருசிலரின் வாழ்கையில்
அவர்கள் எண்ணங்கள் கை கூடி விடும்
சிலரின் வாழ்கையில் அந்த எண்ணங்கள் கரைந்து விடும்
இன்னும் சிலரின் வாழ்கையில் ஒரு தலைக் காதலாகவே
சொல்லாமலும் மனதிற்குள் அமுங்கி விடும்
ஆனால் எது எப்படியாயினும் அந்தநாட்கள் மகிழ்ச்சியே

ஆனந்தம் அங்கலாய்ப்பு சந்தோசம் எல்லாமே
அரும்புவதும் மறைவதும் தொடர்வதும்
சொல்ல முடியா அனுபவமும் சந்தோசமும் தான்
அந்த நாள் எல்லோருக்கும் வந்துதான் போகும்
அந்த அனுபவம் ஆனந்தம் மறக்க முடியாது

முதன் முதலில் மனதில் இன்பம் என்னும் இனிய பறவை
இறக்கை கட்டி பறக்கத் தொடங்கிய நாட்கள்
அந்த ஆரம்பம் ஆயுள் எல்லாம் இனிக்கும் ,
அந்த நாட்கள் யாரையும் விட்டதில்லை தொட்டிடாமல்
அந்த இனிய நாட்கள் இலேசான இயல்பானவை
கடினமற்ற கவலையற்ற காலம் அந்த இனிய காலமே
அதுவே நாம் காணும் கனாக் காலம்

எழுதியவர் : பாத்திமா மலர் (17-Jul-15, 1:58 pm)
Tanglish : kanaak kaalam athu
பார்வை : 78

மேலே