உண்மை காதலை உணராதவள் நீ நீ 555

பெண்ணே...

உன்னை நானும் என்னை நீயும்
பார்க்காமலே உரையாடினோம்...

காதலில் இருவரும்
சந்திக்கலாம் நினைத்தபோது...

அந்த நாளில் குறிப்பிட்ட
மணித்துளியை தேர்ந்தெடுத்தோம்...

என்னருகில் நீயா
உன்னருகில் நானா...?

தெரியாமலே நாம்
சந்திக்கும் இடத்தில்...

நான் வந்த வாகனம் எது
என்று கேட்டாய்...

நான் பதில் சொல்லி
முடிக்குமுன்னே...

காத்திருக்காமல் துண்டித்தாய்
அழைப்பினை...

பெண்ணே உன்னை என்னவள்
என்று நான் சொன்னபோதெல்லாம்...

உள்ளிருந்து
சொன்னேனடி நான்...

நீ பேசிய போதெல்லாம் உன்
உதடுகள் மட்டுமே சொல்லி இருக்குதடி...

காதல் என்றால் என்னவென்று
உணராத உன்னிடம்...

நான் செலவழித்த நிமிடங்களை
எண்ணி வருந்துகிறேனடி...

நீயும் ஓர் நாள் உணர்வாய்
அன்று வருந்தி பயனில்லையடி...

இது என் சாபம்
இல்லையடி...

உண்மை காதலின்
வலியடி பெண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (22-Jul-15, 4:06 pm)
பார்வை : 523

மேலே