மெய்யனே கண் திறப்பாயே

பாற்கடல் வாசனின் பாதம்
***பற்றிடப் பாவமும் தீரும் !
மாற்றிடும் வல்வினை யாவும்
***மாலவன் மந்திர நாமம் !
போற்றியே பாடிட வேண்டும்
***பொன்னடி சேர்ந்திட வேண்டும் !
கூற்றுவன் வந்திடு முன்னர்
***கும்பிடு வாய்மட நெஞ்சே !

சாற்றிய மாலையும் தோளில்
***சௌமிய மாய்மணம் வீசும் !
ஏற்றிய சோதியின் முன்னர்
****ஏங்கியே கூப்பிட வாராய் !
தேற்றிட யாருமே யின்றி
***தேம்பிடும் பிள்ளையைப் பாராய் !
வேற்றுமைப் பார்த்திட லாமோ
***மெய்யனே கண்திறப் பாயே ...!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (22-Jul-15, 9:36 pm)
பார்வை : 149

மேலே