என் குட்டிமாவுக்கு

குதித்தாடும் மழலையென என்
குட்டி தேவதை !
குறும்புப் பேச்சின் அழகில்
அகிலமும் அடங்குமே !
அன்பென்ற மொழியின் வார்த்தை அல்ல
கவிதை வடிவம் அவள் !
கட்டுப்பட்டவன் நான் அவள்
கட்டளைகளுக்கு மட்டும் !
கவலை மறந்தவன் நான் என்
கரம் பிடித்து அவள் நடக்கையில் மட்டும் !
துளிகூட வலித்ததில்லை என் கன்னங்கள்
அவள் முத்தங்களை சுமக்கும்போது மட்டும் !
இப்படி இனித்ததில்லை எதுவும்
அண்ணா எனும் அவள் அழைப்பைத் தவிர !
ஏனோ தெரியவில்லை
இல்லாமல் போனது அவளுகென்று ஓரிடம்
என் தாயின் கருவறையில்!
ஆனாலும்கூட அவள் அன்பு
என்றும்
இத் தமயனிடம் !
எத்தனை நாள் தனிமை
தவம் எனக்கு !
வரமாய் வந்தவள்
என் குட்டிமா !
என் தங்கை !