வடிவாய் எழுதி முடித்தேன்

விருத்த மெழுத விருப்பங் கொண்டு
***விருந்து படைக்க நினைத்தேன் !
அரும்பும் வார்த்தை அவிழு முன்னே
***அழிந்துப் போக நொந்தேன் !
கரும்பின் இனிப்பும் கசப்பாய்த் தெரிய
***கவிதை நினைப்பை மறந்தேன் !
வருத்தங் கொண்ட மனத்தைத் தேற்றி
***வடிவாய் எழுதி முடித்தேன் ...!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Jul-15, 3:40 pm)
பார்வை : 72

மேலே