என் தோழிக்கு

இடம் மாறும் பறவைகள்
போல நாம்
இடையில் சேர்ந்தோம்...
விடை பெற்று பிரிவோம்
ஒரு நாள்...
அந்நாளில் நினைப்பேன்..
என் மனதில் நீயும்
உன் மனதில் நானும்
இருந்தாலே போதும்
நம் நட்பு தொடரும்
பிற்காலத்தில்
உன் கணவனுடன்
நீ வரும் பொழுது
சந்தித்தால்...
சிந்திப்பேன்...
கூறுவாள் இவள்
என் தோழி என்று...
என்றும் உன்
தோழியாக நான்...!