நீ தேடிய பொழுது
உன்னோடு பேசுகிறேன்.....
எங்கே உன்னை காணவில்லை.... ?
என்ற ஏக்கத்தில் நீ என்னை தேடி வந்த பொழுதில்
நீ என்னை பார்க்காத போதும்
நான் உன்னை பார்த்துக் கொள்வேன்
ஏனென்றால்
நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை
முடிவு செய்பவள் நீயென்பதால் என்றேன்.
வார்த்தைகள் மறந்து போய்
என் பக்கத்திலேயே உறைந்து போனாய்.....
நீ என்னோடு பேசும் வரை......