அன்புள்ள மனைவிக்கு

ஆடி பொறந்துடிச்சி
கூடி இருக்காதேன்னு
பாட்டி சொன்னது
பழங்கதை ஆகுமடி !

மூட கதையதை
முந்தானைய்ல்
முடிந்துவிடு !
கட்டிவைத்த
காதலதை
கட்டவிழ்த்து விட்டு விடு !

காலை விடிந்ததும்
காடு வெதைகனுனு
அப்பனோடு ஆத்தாவும்
கலப்பையோடு போய்டுவா !

மத்தியானம் மறவாமல்
மாமன் நானும் வந்துடுவேன்

அக்கம் பக்கம் தெரியாமல்
ஆத்தங்கரை வந்துவிடு

புளிய மரதடிய்ல்
பூத்திருப்பேன் உனக்காக
கடலை மிட்டாயோடு
காத்திருப்பேன் உனக்காக !

.....து.மனோகரன்

எழுதியவர் : து.மனோகரன் (12-Aug-15, 11:41 am)
சேர்த்தது : manoharanma
Tanglish : anbulla manaivikku
பார்வை : 223

மேலே