அன்புள்ள மனைவிக்கு
ஆடி பொறந்துடிச்சி
கூடி இருக்காதேன்னு
பாட்டி சொன்னது
பழங்கதை ஆகுமடி !
மூட கதையதை
முந்தானைய்ல்
முடிந்துவிடு !
கட்டிவைத்த
காதலதை
கட்டவிழ்த்து விட்டு விடு !
காலை விடிந்ததும்
காடு வெதைகனுனு
அப்பனோடு ஆத்தாவும்
கலப்பையோடு போய்டுவா !
மத்தியானம் மறவாமல்
மாமன் நானும் வந்துடுவேன்
அக்கம் பக்கம் தெரியாமல்
ஆத்தங்கரை வந்துவிடு
புளிய மரதடிய்ல்
பூத்திருப்பேன் உனக்காக
கடலை மிட்டாயோடு
காத்திருப்பேன் உனக்காக !
.....து.மனோகரன்