காதல் கவிதை

ஏண்டி என்னப் பாக்குர ...
நூலில் கொஞ்சம் தைக்குர ...
தாண்டி நீ போகையில் ...
நெஞ்சை கட்டி இழுக்குர ...

கட்டுப்படா ஆழு நானும்
கட்டுப்பட்டேன் உன்ன பாத்து
கண்ணு ரெண்டில் என்னப் பாத்து
கட்டிப் போட்டு நீயும் கொள்ள
கல்லெறெஞ்ச தண்ணி போல நானும் ஆனேண்டி ...

ஏண்டி என்னப் பாக்குர ...
நூலில் கொஞ்சம் தைக்குர ...
தாண்டி நீ போகையில் ...
நெஞ்சை கட்டி இழுக்குர ...

கட்டழகன் நானுமில்ல
கட்டிப் போட தேவையில்ல
கட்டழகி உன்ன பாத்து தானா மயங்குறேன் ...
கள்ளத்தன மேதுமின்றி
கஞ்சத்தன மேதுமின்றி
கண்ணு ரெண்டில் என்ன சுட்டு நீயும் திங்குற ...

இஷ்டத்துக்கு பேசுர ...
கஸ்டங்கள போக்குர ...
கொஞ்சம் நான் கிறங்குனாலும்
தெளிய வச்சு அடிக்குர ...
என்ன நீயும் மாத்துர முழுசா ...
நினைச்சதை செய்யுற தினுசா ...

ஏண்டி என்னப் பாக்குர ...
நூலில் கொஞ்சம் தைக்குர ...
தாண்டி நீ போகையில் ...
நெஞ்சை கட்டி இழுக்குர ...

உள்ளுக்குள்ள உள்ளதெல்லாம்
உன்னிட்த்தில் சொல்லிப்புட்டேன்
உள்ளங்கையில் உன்னை வச்சு தாங்க நினைக்குறேன் ...

கள்ளடிக்க தேவையில்லை
பீரடிக்கத் தேவையில்லை
உன் முகத்தை பாத்தாலே தானா ஏரும் போதை ...

ஏண்டி ...
ஏண்டி .....
ஏண்டி என்னப் பாக்குர ...

எழுதியவர் : சிவா அலங்காரம் (14-Aug-15, 3:06 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 178

மேலே