மீட்டிடு வாழ்க்கையையும்

வீணை மீட்டிப் பண்பாடும்
வாணி யொத்த பெண்மகளே,
பேணும் குடும்ப வாழ்க்கையையும்
பண்புடன் வீணையாய் மீட்டிடுவாய்,
காணுவாய் கணக்கிலா ராகங்களை
களிப்பெலாம் கொண்டு வந்திடுமே,
தூணென ஆவாய் குடும்பத்திலே
துயரதைப் போக்கிடும் உன்னிசையே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Aug-15, 7:42 am)
பார்வை : 75

மேலே