மீட்டிடு வாழ்க்கையையும்
வீணை மீட்டிப் பண்பாடும்
வாணி யொத்த பெண்மகளே,
பேணும் குடும்ப வாழ்க்கையையும்
பண்புடன் வீணையாய் மீட்டிடுவாய்,
காணுவாய் கணக்கிலா ராகங்களை
களிப்பெலாம் கொண்டு வந்திடுமே,
தூணென ஆவாய் குடும்பத்திலே
துயரதைப் போக்கிடும் உன்னிசையே...!