என்னை எழுதாதே

என்னை பற்றி எழுத வேண்டாம்
அந்தப் பெருமை எனக்கு வேண்டாம் என்றாய்

எழுதிய கவிதைகள் நூறு
எழுதாத கவிதைகள் நூறு
எழுதினால் மறுக்கின்ற உறவுகள் வேறு
இதில் நான் யாரோடு இருப்பது
நீயே கூறு என்றேன் வருத்தத் தோடு...

நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு
என்னை தண்டிக்காதீர்கள் என்றாய்...

மறுக்காதே மறைமுகமாய் உன்னை
அறிமுகம் செய்கிறேன் இந்த உலகிற்கு.
இதனால்
உனக்கு எந்த சிக்கலும் இல்லை
ஆனால் உனக்கு வரும் விக்கலுக்கு நான் பொறுப்பல்ல என்றேன்

"அட உன் வெட்கத்திற்கும் விக்கல் வந்து விட்டதே "

எழுதியவர் : parkavi (31-Aug-15, 10:30 pm)
பார்வை : 259

மேலே