காதல் கருவறை

என்னவனே..
என்ன தவம் செய்தேனோ,
எனக்கென நீ கிடைக்க..!!??!!

என் தாயின் கருவறை நினைவில் இல்லை..
எனினும், நான் கருவறை வாசம் அறிந்தவள் தான்..
என்றும் உன்னுள் வாழ்வதால்.. ஆம்..
எனக்கு, உன் இதயமே நான் வாழும் கருவறை..!!

என் தாய் வாசம் அறியாதவள் தான் நான்;
எனினும், உன்னால் தாய் பாசத்தை உணர்ந்தவள் நான்..!!

என்னை அன்போடு அரவணைப்பதில், என் தாய் நீ;
என்னை கோவித்து கண்டிப்பதில், என் தந்தை நீ;
எனக்கு தோள் கொடுத்து துயர் துடைப்பதில், என் தோழன் நீ;
எனக்கு பள்ளியறை வித்தைகளை கற்றுத்தருவதில், என் கணவன் நீ;
என் இதயத்தை கொள்ளை கொண்ட கள்வன் நீ;
என் உடலை அபகரித்த கயவன் நீ;
என் எண்ணத்தில் ஒளியேற்றிய சூரியன் நீ;
என் உள்ளத்தை குளிர வைத்த சந்திரன் நீ;
என் மரணத்தை தடுக்க வந்த மாயாவி நீ;
என்றும் என்னுள் வாழ்ந்து,
என்னை வாழவைக்கும் கடவுள் நீ..!! மொத்தத்தில்
எனக்கு யாதுமாகி நின்றாய் நீ..!!

என்னவனே,
என்ன தவம் செய்தேனோ,
எனக்கென நீ கிடைக்க!!??!

எழுதியவர் : சுதா ஆர் (2-Sep-15, 11:59 am)
Tanglish : kaadhal karuvarai
பார்வை : 178

மேலே