எழுது கோல் அழுகிறது

எழுது கோலால்
எழுதி விட்டேன் என்
எண்ணத்தை..

எழுந்தே வந்து விடு
என்னுள் நீ....எண்ணிய
படியே வாழ்ந்து விடலாம்..

ஆசைகள் ஆயிரம் என்னை
தட்டியே எழுப்புகிறது..உன்னை
அனைத்து கொள்ள என்னுள்..

என் எண்ணம் துடியாய்
துடிக்கிறது..என்னை தவிக்க
விடாதே..என்னவளே..

எப்படியாவது வாழ்ந்து
விடலாம்..வந்து விடு
என்னிடம் நீ..

எட்டாத கனியை கூட
எண்ணி விட்டால்
அடைந்து விடலாம்..

என் எழுது கோல்
உனக்காக அழுகிறது
எப்படியாவது வந்து விடு..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (2-Sep-15, 12:14 pm)
பார்வை : 83

மேலே