கற்க கசடற

கற்க கசடற
கற்றபின்
கையேந்தி நிற்காதே
பிச்சையெடுக்க !

கற்றாரை கற்றாரே
காமுறுவர்
ஆதலினால்
கல்லாதாரை கல்வியில்
காதற் கொளச் செய் !

ஊழிற் பெரு வலி
யாவுள ?
ஆயினும்
உறுதியான உள்ளத்தை
எதிர்ப்பவை உலகில்
யாவுள ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Sep-15, 4:24 pm)
பார்வை : 530

மேலே