கேள்வி நேரம் கிடையாதோ

முத்துச்சுடர் குவியல்
முற்றத்திலே ஒளிரும்
நடுக்கடல் போனபின்பும்
அலை நம்மவர் என பழகும்
அவ்வபோது புயல் வந்து தழுவும்
தழுவலாய் ஏற்றுக்கொண்டதாலோ
என்னவோ
செல்ல வரண்டி அடையாளம்
பதித்துச் செல்கிறது
அடையாளம் தெரியாதபடி
காலையில் போனவன்
மாலையில் வந்தால் சந்தோசம்
மாண்டு மாலையோடு வந்தால்
மனம் பதறாதோ
கேடுகெட்ட அரசாங்களுக்கு
கேள்வி நேரம் கிடையாதோ?

எழுதியவர் : -இது என் குழந்தை (4-Sep-15, 5:26 pm)
பார்வை : 76

மேலே