என்னை வளர்த்த உறவு ஆசான்கள் ஊட்டிய அறிவு
மாணவனாய் இங்கு ஓர்சில வரிகள் எழுதுகிறேன்.
இன்று உங்களுக்கு மணிமகுடம் சூட வேண்டும்.
என்னை வளர்த்த உறவு,
ஆசான்கள் ஊட்டிய அறிவு,
வாழ்வில் பெற்ற நிறைவு,
மனம் மகிழ்கிறேன் இனிதே...
கலைகள் வளர்த்த கைகள்,
வரிகள் வடித்த மைகள்,
செயல் உணர்த்தும் மெய்கள்,
நீங்கள் என்றும் முகம்மலர வேண்டும்...
ஒருசில வரிகளில் உங்களுக்கு
வாழ்த்துக்கள் சொல்லிவிட முடியாது.
கடல் ஆழம் என்னவென்று
கரை அறியாது.
கல்வி நீரை சுமந்திருக்கும் மேகங்களாய்
நீங்கள் என்றும் மழையை பொழிய வேண்டும்...