சிறகு முளைத்த பறவை நான்

காரணமறிய தோன்றிய குழப்பம்
மூன்று நாட்களாகியும் முடிவுகள் எட்டப்படவில்லை
சொல்லப்போனால் மூன்று வருடங்கள்
குழப்பத்தின் உச்சம்தான் இந்த மூன்று நாட்கள்
தூக்கங்கள் வருவதாய் இல்லை
திறந்த கண்களோடு சிமிட்டும் இமை மறந்து
எதையோ யோசித்துகொண்டிருகிறேன் எதையெதையோ யோசித்துகொண்டிருகிறேன்
எனக்குள் நானே எண்ணூறு முறையாவது பேசி கொள்கிறேன்
செய்வதறியாது அந்த அறைக்குள்ளே புழுங்கி புழுங்கி
தெரியாத்தனமாய் மொட்டை மாடியின் தண்ணீர் தொட்டியின் படிக்கட்டில் ஏறிவிட்டேன்
நகரத்தின் சத்தத்தை மீறிய ஓர் இருள்
எங்கயோ தொலைத்த கனவுகளை அந்த இருட்டுக்குள்ளே தேட தொடங்கினேன்
மூன்றுமணி நேரம் அப்படி என்ன தான் செய்தேன்
அப்படி ஒரு அமைதி எனக்குள்ளே
நான் நானாகவே இல்லை
இத்துணை நாள் இங்கு வராமல் என்னை நானே ஒரு செல்போனிடம் கணினியிடம் சிறை கொடுத்துவிட்டேன்
முன்பே ஒரு நாள் வந்திருந்தால்
எண்ணங்கள் தெளிவாயிருக்கும்
சிந்தனைகள் சிறந்திருக்கும்
எனக்கும் கூட ரெக்கைகள் முளைத்திருக்கும்
நானும் சிறகடித்து பறந்திருப்பேன்
பரவாயில்லை
நானும் ஒரு நாள் பறக்க தான் போகிறேன்
குழப்பம் தீர்ந்தபாடில்லை
தீர்வை காணும் தெம்பு வந்துவிட்டது
## சிறகு முளைத்த பறவை நான்

எழுதியவர் : கர்ணன் அண்ணாமலை (13-Sep-15, 2:36 am)
பார்வை : 880

மேலே