தவம் கிடக்கின்றேன்

வீசிச் சென்ற
புயல் காற்றில்
காம்பின் காதலியான
மலரின் இதழ்களில்
உதிர்ந்து விழுந்த
ஓரிதழாய் கிடந்தவள்
நீதானோ..?
உன்னை நெருங்கையில்
வாசம் என்னை
நெருங்குகின்றதே..!!
உன் உடைகளின்
உரசல்களினால்
போர் படைகளை
திரட்டி போராடுகின்றன
என் காதலும்
என் காமமும்..!!
இதழ் மேலாடும்
ஈரத் துளிகள்
அதிகாலைப் பொழுதின்
பனித் துளிகளே
மணியாகப் பிறந்ததிற்க்குப்
பதிலாய் அந்தப்
பனியாகப் பிறந்திருக்கலாம்..!!
வளைந்தே வாழும்
வானவில் கூட உன்
வளைவு நெளிவுகளைக்
கண்டு நெடுநேரம்
வாய் பிளக்கும்..!!
இடமின்றி நிரம்பி
வழியும் என்
கண்களில் உன்
அழகினை சேமித்து
வைக்க இன்னும்
பல கண்கள் வேண்டி
தவம் கிடக்கின்றேன்..!!
செ.மணி