கரிசன முகங்கள்

நா நெலா இல்ல.

ஆனாக்கூட
உன்னப் பாக்காதப்போ
அமாவாசையா இருட்டிப்போறேன்.
உன்னப் பாக்கறப்போ
பவுர்ணமியா ஜொலிக்கறேன்..

நா காத்து இல்ல

ஆனாக்கூட
உன்னப் பாக்காதப்போ
புயலா ஆயிடறேன்.
உன்னப் பாக்கறப்போ
மெதுகாத்தா மாறிடறேன்.

அம்மா’ அண்ணனுக்கு என்னமோ ஆயிடுச்சு..
பயிர் அறுக்காம
வெறுங்காத்துல பேசிட்டிருக்கு..வாம்மா..
தங்கச்சியின் கூப்பாட்டில்
கலைந்தது போனேன்..

”சாமத்துல தண்ணிகட்ட
புளியமரத்துப் பக்கம்
போகாதேனு சொன்னனே கேட்டயா ,,,:”
பதறி வந்த அம்மாவின் புலம்பல்

”உனக்கு ஒன்னும் இல்ல
தின்னூரு மந்திரிச்சா செரியாப் போகும்.”
உள்ளுக்குள் பதட்டத்துடன் வந்தாலும்
வெளிக்காட்டிக்கொள்ளாமல்
தோளைத்தொட்டு அப்பாவின் சமாதானம்.

இவர்களின்
கரிசனத்துக்கு முன்
தோற்றுப்போய் நிற்கிறது
நான் மறைத்து வைத்திருந்த
காதலும்
நான் பேசி வந்த
நம்பிக்கை வாதங்களும்.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (20-Sep-15, 2:00 pm)
பார்வை : 116

மேலே