ஏழாவது மனிதன் 3

அவன் உழைத்ததை
தின்று,
அவன் நெய்ததை
உடுத்தி,
அவன் செய்ததை
அணிந்து,
அவன் திருத்தியதில்
அழகாகி,
அவன் பெருக்கியதில்
வாசலாகி,
அவன் கட்டியதில்
வாழ்ந்து
செத்துப் போன
காலம் முழுக்க
சாதி சுமந்த
பெரியவரை
கடைசியிலும்
அவன் தான்
எரித்தான்....


கவிஜி

எழுதியவர் : கவிஜி (21-Sep-15, 11:59 am)
பார்வை : 93

மேலே