வாழும் உயிரில்லையே

மனதில் நிறைந்தவளே..!
வடக்கிலிருந்து வரும் வாடைக்காற்று
வாழும் உயிர்களுக்கு ஆகாதாமே... !
அதனால்தான் தென்றல்காற்றை
கவிஞர் உலகம் தத்தெடுத்துக்கொண்டதோ..!..!

கருமை போர்த்திய அமாவாசை நேரங்கள்
அமானுக்ஷ்யங்களின் நேரங்களாமே..!
அதனால்தான் பெளர்ணமி நாட்களை
கவிஞர் உலகம் தத்தெடுத்துக்கொண்டதோ.!..!
.
அவர்கள் ஒதுக்கியதை
நான் அனுபவிக்கும் நேரமிது..!

ஆம்..
பெற்றோர் உன்னைப் பிரித்ததினால்
இப்போது நான்
வாழும் உயிரில்லையே...!..!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (24-Sep-15, 9:08 pm)
பார்வை : 489

மேலே