கனவே கலையாதே

சேரன் இயக்கிய திரைபடம் ஒன்று. நமது 'பட்ரோல் பங்க்'களில் வெளி நாட்டு வெள்ளைக்காரர்கள் வேலை செய்வதாக ஒரு காட்சி இடம் பெறும். வெறும் கனவு மட்டுமே என அதை எண்ணினோம் நாம். அந்தக் கனவு மெய்ப்படத் தொடங்கி விட்டதோ?

நம் கல்வி முறை மாறியிருக்கிறது. ஊதிய ஏற்றத் தாழ்வு காரணமாக மெக்கானிக்கல், சிவில் முதலிய அடிப்படைப் பொறியியல் படிப்புகளை எவரும் படிப்பதில்லை இன்று. சிறப்பான இலக்கியவாதிகளை சினிமா அரக்கன் வளைத்துக் கொண்டது போல, இவர்களை கணிப்பொறி அரக்கன் வளைத்துக் கொள்கிறான்.

நெசவு இயந்திர உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இலஷ்மி மெசின் வொர்க்ஸ் எனப்படும் LMW. அதிலே 12 வருடங்களாக முக்கியப் பொறுப்பில் இருந்து வரும் ஒரு பொறியாளருடம் சில தினங்களுக்கும் முன் பேச நேர்ந்தது. "பாஸ், ஒரு 2 மாசத்துல SAP படிச்சு சாப்ட்வேர் கன்சல்ட்டிங் சைடு வர முடியுமா?" என்பதே அவரது வினா.

இப்படியே போனால் கிராம வாசிகள் நகரங்களுக்குப் படையெடித்து வரும் அதே அளவு, அடிப்படைத் துறைகளின் வல்லுனர்கள் கணிப்பொறி மற்றும் அழைப்பு மைய வேலைகளை நோக்கிப் படையெடுக்கலாம்.

அடிப்படை உள் கட்டுமானத் தேவைகளான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், வான்முகங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்கள், தொழிற்சாலைகள் முதலியவற்றை நிர்மாணிக்க வேண்டியதே இன்றைய கட்டாயம்.

L&T (போன்ற எல்லா) நிறுவனம் தரமான சிவில் பொறியாளர்கள் உள் நாட்டில் கிடைக்காமல் திணறி வருகிறது. நாம் ஒத்துக்கொண்டாலும், கொள்ளாவிடிலும் இது போன்ற நிறுவனங்கள் தான் தேசத்தை நிர்மாணிக்கின்றன.

நம்மவர்கள் H1 விசா வாங்கி அமெரிக்காவில் பணியாற்றுவது போல, வெளி நாட்டவர் இங்கு வந்து வேலை செய்கின்றனர். ஆதாரம் தேவையென்றால் L&T தலைவர் நாயக் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

குழந்தைகளின் நாயகன் குடியரசுத் தலைவர் அப்துல் காலாம் கண்ட 2020 கனவு நனவாக, நிரம்பச் செய்ய வேண்டி இருக்கிறது. 2010 க்குள் என திட்டக் கமிஷன் அமைத்திருக்கும் இலக்கு கூட இன்றைக்கு வெறும் கனவு போலத் தோன்றுகிறது. It is time to adjust our priorities.

நாளை அப்பிரிக்காவில், மனிதன் கணிப்பொறியும் ஆங்கிலமும் கற்க ஆரம்பித்து விட்டால், IBM, மைக்ரோசா·ப்ட் மட்டுமின்றி TCS, இன்போசிஸ், விப்ரோ கூட அங்கே ஓடிவிட வாய்ப்பு உண்டு. இப்போது கூட கிழக்கு ஐரோப்பா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, சீனா ஆகிய தேசங்களில் இவை வேர் விட ஆரம்பித்து விட்டன. பட்டொளி வீசும் கொடிகளாத் தோன்றும் இந்தத் துணிகள், வலுவான கம்பத்தை நாம் அமைக்காவிடில், வெறும் பட்டமாக மாறிவிடும். காற்றின் போக்கில் பறந்து விடும்.

அடப் போங்கப்பா. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும். அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

M.S. படிக்க நம் மாணவர் அமரிக்கா போவது போல, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இங்கே வந்து படிப்பவர்களைக் காண முடிகிறது. (நான் வசிக்கும் பகுதியில் டீக்கடை, புரோட்டா கடை என எங்கும் இவர்கள் தான்)

அதெல்லாம் இருக்கட்டும். சேரனின் கனவும், காலாமின் கனவும் நனவாகுமா?

எழுதியவர் : செல்வமணி - இணையம் - குப்புச (26-Sep-15, 8:05 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kanave kalaiyaathe
பார்வை : 620

மேலே