காதல் -02 -முஹம்மத் ஸர்பான்

அடர்ந்த காட்டில்
படர்ந்த கொடி போல்
காதலாகி என்னுள்
இதயம் புதைத்தவளே!

எல்லையில்லாத
வானாய் மாறுகிறேன்.
தேயாத வெண்ணிலவாய்
என் மேல் ஒட்டிக்கொள்.

என் மனமும் மலர் போல்
உன்னிடம் இருந்தால்
வரட்சியான காதலில்
சாகாமல் உயிர் வாழ்வேன்.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (29-Sep-15, 6:20 am)
Tanglish : kaadhal
பார்வை : 194

மேலே