ஊடல்

உன் பொன் விழியில்
புயல் ஒன்றை நான் காண்கிறேன்..
கொஞ்சம் புன்னகை செய்யடி - ராட்சசி ..

உன் மெளனத்தின் வாசலிலே
என்னை கட்டிபோட்டுவிட்டு ..
வன்முறைகள் செய்கிறாயே - ஏனடி..

உன் கொலுசின் ஓசையினை
கேட்கவே எங்கும் என் இதயத்தை
விரதம் இருக்க செய்கிறாயே - போடி ..

உன் பிஞ்சு விரலின்
இஞ்சி இடுக்கில் நுழைந்திருக்கும்
என் விரல்களை கெஞ்ச வைக்கிறாயே - சதிகாரி

உன் கணத்தில் முத்தமிடும்
என் உதடுகள் இப்பொது
பாலைவனமாய் மாறி கிடப்பதை பாரடி - சினேகிதியே ...

எழுதியவர் : இளைய பாரதி (31-May-11, 8:04 pm)
சேர்த்தது : ilayabarathi
Tanglish : oodal
பார்வை : 419

மேலே