மயிலே
 
 
            	    
                இதுவரை இப்படி நிகழ்ந்ததில்லை 
கண்டதும் காதலில் நம்பிக்கையில்லை 
இருப்பினும் ஒவ்வொரு பார்வையிலும் 
                                 புதிதாய் தெரிந்தாய் 
மயக்கும் விழியும் சிலிர்க்கும் தலையசைவும் 
பார்பதற்கே நேரம் போதவில்லை 
படைத்தவனுக்கு போதியதோ ?
அசைவுகள் கூட ஈர்த்தன உன்பக்கம்,
பெண்களை மிஞ்சிய கூந்தல்.,
எண்ணங்களை சிதறச்செய்யும் 
வண்ணங்களின் மாயமென்ன ..!
ஆணினம் கர்வம் கொள்ளும் அழகு 
உன்னிடம் உள்ளதில் பெருமையல்லவோ 
                        மயிலே......!
 
                     
	    
                
