வடுக்கள்

வலிகள் சுமந்த மண்ணில்
வடுக்கள் ஆறவில்லை !
மரணத்தை வென்ற பின்னும்
மாறுதல் ஏதும் இல்லை !

ஆறாத காயங்களோடே
ஆதாரமற்ற வாழ்க்கை !
அங்கவீனமும் வாழ்வின்
அங்கமாகிப் போனது !

இழந்தவைகள் போக
இன்மை நிலை இன்னுமுண்டு !
தொலைத்தவைகள் போக
தொடர்கதைகள் இன்றுமுண்டு !

குருதித் துளிகளில்
குறிப்பெடுத்தவர்களே !
இவர்கள் எதிர்காலத்தையும்
இனி நினைவில் கொள்ளுங்கள் !

-பொலிகையூர் ரேகா

எழுதியவர் : பொலிகையூர் ரேகா (4-Oct-15, 12:24 pm)
Tanglish : vadukkal
பார்வை : 530

மேலே