தூய்மை இந்தியா
கழிவுகள் கோடி அழிவுகள் கோடி
மக்களின் தூய்மை எவர் அறிவார்...
தேசத் தூய்மை தேவையின் அருமை
உணர்வது இன்று யார் அறிவார்...!
குப்பைகளை கொட்டி குழியில் தள்ள
குடும்பத்தில் எவர்தான் பொறுப்பேற்பார்...
ஆலைகள் தோறும் கழிவுகள் இல்லாநிலை
அடைந்தாள் மாசுக்கு இடம் தான் யாரறிவார்...!
வீதிகள் தோறும் பளிச்சிடும் நாட்கள்
நாளை வருமென்று நாம் உணர்வோம்...
வீடுகள் தோறும் கழிவுகள் இல்லா
கழிவுக்கு விடுதலை யார் தருவார்...!
காற்றிலும் மாசு, கடலிலும் மாசு
மண்ணிலும் மாசு, மழையிலும் மாசு
உயிரிலும் மாசு, உணவிலும் மாசு
மாசுக்கு எவர்தான் பொறுப்பேற்பார்...!
அன்பரே! தூய்மைக்கும் முதலிடம் தந்திடுவீர்!
தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுதிடுவீர்!