மெழுகே அழகே

மெழுகே..! அழகே..!

தன்னில் -
உருகி ஒளிரும்...
மெழுகே..! - இளமை
அழகுகே..!

உன்னில் -
பெருகி வழியும்...
மென்மை..! - இலங்கும்
பெண்மை..!

கண்னில் -
காட்டும் காட்சி...
கனலே..! - காதல்
புனலே..!

மண்னில் -
துலக்கும் வதன...
ஒளியே..! - மயக்கும்
மதியே..!

என்னில் -
புலர்ந்த புதுமை...
உணர்வே..! - உறைந்த
உயிரே..!

பொன்னில் -
எழுந்த தவமாய்...
புதுமை..! - பூத்தமது
பதுமை..!

எழுதியவர் : இராக. உதயசூரியன். (17-Oct-15, 8:29 pm)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 117

மேலே