நலம் வளர்க்கும் நவராத்திரி கொலு

"நலம் வளர்க்கும் நவராத்திரி கொலு!"
===============================
முப்பெருந் தேவியர் கொலுவிருக்க
மும்மூர்த்திகள் அருள்மழைபொழிய
முப்பத்து முக்கோடி தேவர்களும்
முனிவர்களும் சித்தர்களும்அடியவரும்
முன் வந்து கொலுவில்அமர்ந்திடுவார்.

மும்மூன்று நாட்கள்ஆண்டுதோறும்
முனைந்து நவராத்திரி கொலு வைத்து
முப்பால் உரைத்த வள்ளுவர்வழி
மூவுலகும் மெச்ச வாழ்ந்திடுவார்!

உற்றார் உறவினர் உடன்
உழைக்கும் மக்கள் யாவரும்
அன்புடன் நட்பு பூண்டு
அகிலம் ஆளும் நாயகி
அருள்நிறை அன்னை சக்தியின்
அருளாசி வேண்டுவார்!

நானிலந்தன்னில் நவயுகத்தில்
நாளும் வளர்ந்து நலம் தரும்
விஞ்ஞானமும் மெய்ஞானமும்
விஞ்சிடும் அதன்தன்மைக்கேற்ப
வியப்பூட்டம் சிறபபூட்டும்
கொலுவில்.!?

விதவிதமாய் ஆன்மிகக் காட்சிகள்
விந்தைக் காட்டும் அறிவியல்காட்சிகள்.
காண்போர் கண் களிக்கும் மீளாது
காட்சியில் மனம் லயிக்கம்.!

முன்னின்று மூத்தோர் ஆசீர்வதிக்க
முந்துறும் அன்பால் சுற்றமும்நட்பும்
முகம் மலர்ந்து நல்வாழ்த்துரைக்க
முகமும் அகமும் மகிழ்வுறுவார்!

மங்கல நாண் குங்குமச்சிமிழ்
மங்கலப்பொருள் அத்தனையும்
மங்கலமாய் மாண்புடன் வாழ்ந்திடவே
மங்கல குங்குமமிட்டு மகிழ்ந்தளிப்பார்


புத்துருக்கு நெய் பட்சணமும்
புத்தரிசி முறுக்கும் தட்டையும்!
மூக்குக்கடலை சுண்டலும்
மூக்கு உடைபடும் கிண்டலும்
குறையாது கொடுத்திடுவார்
நிறைவாக உண்டு மகிழ்ந்திடுவார்.!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (21-Oct-15, 8:13 pm)
பார்வை : 218

மேலே