தோசைக்கரண்டிக்கே வெளிச்சம்
இரவு தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து
"என்னங்க இன்னொரு தோசை!", என்று கேட்டபடியே வெறும் தோசைக் கரண்டியுடன் வந்த மனைவியைப் பார்த்து கணவன் என்ன புரிந்து கொள்வான்...
"இன்னும் ஒரு தோசை கேட்டுடுவியா..." என்று சொல்வதாக நினைப்பானா...
"இல்லை நீங்க கேட்டா உடனே சுட்டுத்தருவேன்" என்பதாக நினைத்துக் கொள்வானா என்பது...
அந்த தோசைக்கரண்டிக்கே வெளிச்சம்..!!!