நினைவுடன்

உறவுகள் நம் பிரிவில்
மகிழ்ந்த்தது ...யாரறிவார்
வாழும் நாள் முழுவதும்
சாகப்போவது நாம் என்று

நானும் இங்கே உன் நினைவுடன்
நீயும் அங்கே என் நினைவுடன்
வாழ்வதா சாவதா முடிவெடுக்க
தெரியாத கோழையாய் நானும்
இங்கே உன்னாலே ..........

கனவிலும் நினைவிலும் உன்னையே
எண்ணிடும் என் இதயம் உந்தன்
காலடி சேர துடிக்குதடா ...ஆம்
உன் காலடியில் தன துடிப்பை
நிறுத்தி விட தான் .....

கடல் அலை போலே ஓயாதுடா
நம் காதல் ..ஆனால் விதியின்
விளையாட்டால் நீரின் மேல்
எழுத்தாய் ஆனதடா ...........
v.m.j.gowsi

எழுதியவர் : v.m.j.gowsi (5-Jun-11, 5:00 pm)
சேர்த்தது : m.j.gowsi
Tanglish : ninaivudan
பார்வை : 314

சிறந்த கவிதைகள்

மேலே