பெருந்தலைவன் பாதை செல்வோம்

குலந்தன்னில் நின்றாடும் மலரின் கொங்கு !
குளிர்நீரைத் தருகின்ற வளர்ந்த தெங்கு !
களந்தன்னில் முழக்கமிடும் வெண்மைச் சங்கு !
கமல்நாடான் பாரதத்தின் பிரியா பங்கு !
வளந்தன்னை சேர்க்கின்ற வற்றா கங்கை !
வந்தவரை அணைக்கின்ற தூய்மை செங்கை !
புலந்தன்ன்னில் மணக்கின்ற பொதியின் சாந்து !
புன்மையிரை மடக்குகின்ற புலியின் போந்து !

அன்னியரா நமையாளால் ? என்றே பொங்கி ,
ஆர்ப்பரித்து காந்திமகான் படையில் தங்கி ,
மின்னலெனப் பாய்கின்ற துவளா தொண்டால் ,
மேனாட்டார் வெள்ளையனும் இவனைக் கண்டால் ,
குன்னிவிட கலக்கமுற போரில் வென்று ,
கொத்தடிமை விலங்கொடித்து காட்சி தந்து ,
மின்னுகின்ற விடுதலையை தந்தான் ! மாட்சி
மின்னிவிட தமிழகத்தில் கொண்டான் ஆட்சி !

மருந்தெனவே அளவான வார்த்தைப் பேசி ,
மலை மலையாய் சாதனையின் ஒளியை வீசி ,
நறும்பூவாய் மனந்திட்டான் நேரு மார்பில் ,
நந்தமிழர் திறங்காட்டி நின்றான் போர்வில்
பிறந்திட்ட இமண்ணின் உயர்வை என்னி ,
பிழைத்திட்டான் தன்னிடம் எல்லாம் தள்ளி !
பெருந்தலைவன் பறந்திட்டான் காந்தி தேடி
பாதையினில் நடந்திடுவோம் ஒன்றாய் கூடி !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (28-Oct-15, 7:28 am)
பார்வை : 60

மேலே