என் கண்ணிலே குத்தும் உன் நினைவெனும் முற்க்கள்..............................


உன்னால் உயிர் பெற்றேன்
முதல் முறை
என்னை சுற்றி வந்த
என் செல்ல தேவதையே

விண்ணை சுற்றும்
நட்ச்சத்திரம் போல
என்னை சுற்றும்
உன் நினைவெனும்
மின்மினி பூச்சிகளின்
கண்ணீர் துளிகளுடன்
என் கவிதை துளிகள்

முத்திரையாக
என் நெஞ்சில்
காதலை பதித்து
சித்திரமாக
உன்னை வரைந்து
வைத்து
பத்திர படுத்திய
எனக்கு
கண்ணீர் ஒன்றையே
ஆறுதலாக
கொடுத்து விட்டாயடி

நாளுக்கு நாள்
என் கண்ணிலே
உன் நினைவெனும்
முற்க்களால்
குத்தப்பட்டு
வலி நிறைந்த
கண்ணீருடன்
மன முடைந்து
மடிந்து கொண்டிருக்கிறேனடி
இந்த பூமியில் நான்..........

இப்படிக்கு...........உன்னவன்

எழுதியவர் : நந்தி (6-Jun-11, 1:23 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 591

மேலே