அலாவுதின் அற்புத விளக்கு

அப்பாவும் மகள் அபியும் அலாவுதின் அற்புத விளக்கு படம் பார்த்து கொன்டு இருந்தனா்.
அபி: அப்பா.
அப்பா:என்ன டா அபி கண்ணா?
அபி:அது என்ன அப்பா பெருசா இருக்கு?
அப்பா : அது தாண்டா பூதம்.
அபி:அது என்ன பா பண்ணும்?
அப்பா:அது அலாவுதீன் கேக்குறது எல்லாம் கொடுக்கும்.
அபி:என்ன கேட்டாலும் கொடுக்குமாபா?
அப்பா :ஆமா அபி உனக்கு வேணுமா அபி அது மாதிரி பூதம் ?
அபி :எனக்கு வேணாம் பா.அலாவுதீன் கிட்ட அப்பா இல்ல அதுனால தான் சாமி பூதம் குடுத்து இருக்காரு எனக்கு அப்பா இருக்காரே கேட்ட எல்லாம் வாங்கி கொடுக்க.
எனக்கு கடவுள் குடுத்த அற்புத விளக்கு அப்பா தான்..

எழுதியவர் : பதிவு : செல்வமணி (29-Oct-15, 12:55 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 129

மேலே