தீயே உனக்கு மரணம் வராதா
புன்னகையோடு பூத்து குலுங்கி
வண்ண வண்ண
மொட்டுகளாய்
மலர்ந்தோம் நாங்கள்
மொட்டுலே கிள்ளிய காரணம்
என்ன சொல் தீயே !
புள்ளி மான்களாய்
துள்ளி திரிந்த எங்களை
புல்லுக்கு இரையாக்கிவிட்டாயே
இது நியாயமா தீயே !- நாங்கள்
உனக்கு செய்த பாவம்
என்ன சொல் தீயே !
வண்ணத்து பூச்சிகளாய்
சிறகடித்து பறந்தோம் - நாங்கள்
ஆனால்
எங்கள் சிறகுகளை தீவைத்து
கொளுத்திய காரணம் என்ன
சொல் தீயே !
மழலை செல்வமாய்
இருந்த எங்களை
மரண ஓலையில் - படுக்க
வைத்த காரணம்
என்ன சொல் தீயே !
எங்கள் கதறல்கள்.
உனக்கு என்ன தாலாட்டா .........
சொல் தீயே ! -உனக்கு
முற்று புள்ளியாக - எங்கள்
அழுகை குரல்களை
காணிக்கையாக்குகிறோம் .