ப்ரோக்ராமர்

நீ இன்று கவிதை எழுதுவாய்
பதிவிடுவாய், பகிர்வாய்
பிடித்தது என்று கூறுவாய்
கருத்தளிப்பாய் வேறுபடுவாய்
மாற்றுவாய், திருத்துவாய்
உலகறியச் செய்வாய்
கருத்து வேறுபடுவாய்
ககனத்தில் வாய்வாள் வீசி
சண்டையிட்டுக் கொள்வாய்
உடனுக்குடன்......

இப்படி இருந்தால் நன்று
அப்படி இருந்தால் நன்று
என்று எண்ணுவதையெல்லாம்
முன்கூட்டிக் கணித்து
உன் மனம் விரும்பும்
படியெல்லாம் அன்றே
வளைதளம் அமைத்துக்
கொடுத்தான் இறைவன்...

அவனை நீ ப்ரோக்ராமர்
எங்கிறாய்.....
------- முரளி

எழுதியவர் : முரளி (4-Nov-15, 3:45 pm)
பார்வை : 139

மேலே