கொம்பே துணை

தள்ளாடும் வேளையில் தாங்கிட யாருமில்லா
உள்ளத்தின் வேதனை ஓயாதோ ?- பிள்ளை
யிதயமும் கல்லோ ? யிரும்போ? கைவிட்டார்க்
குதவிடும் கொம்பே துணை .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (8-Nov-15, 12:06 am)
பார்வை : 62

மேலே