இன்றில்லை

வருடந் தவறாது வந்து
வாங்கிப்போன
'அம்மன் தெவசக்காரிகளும்

ஈரச்சிவப்பு மண்ணில்
இரும்பு குழல் பதித்து
இரவல் கரித்தணலின்
ஈயப் பூச்சும்

அறுவடை நாட்களின்
குன்னடையாக் கூத்தும்
குலவையும்

சோமாரச் சந்தையின்
சுடு வடையும்
பொரி சக்கரையும்

விடலைகளின் கேலி மீறி
விடாமற்க் கேட்ட
ஒலக்கெய்ச் சத்தமும்

ஈஞ்சன் , காரை , பூலான்,
புளியன் , கள்ளிப்
பழங்களும் காய்களும்

எதுவுமே
இன்றில்லை
உன்னைப்போல !

எழுதியவர் : (17-Nov-15, 3:07 pm)
பார்வை : 72

மேலே