மகிழ்ச்சியின் முயர்சி

இவ்வுலகு இனிது..
நமக்கெல்லாம் மூத்த இவ் வான் இனிது..
துறந்த காற்றினிது..
இக்காற்றை துரத்தி வாழும் உயிர்கள் இனியன..

உயிரியில்
மனிதர் இனியர்...

மனிதரின் மகத்துவங்கள் இனியன...

இவர் தொட்டு வளர்த்த கவலைகள் இனிது..
இவரை தொட்டு வளர்ந்த நோய்களும் இனியன...

சௌகரியங்கள் இனிது..
சங்கடங்கள் இனிது..
தொல்லைகள் இனிது..
மனித மூளையை கசக்கும் முடிச்சவிழா முரண்பாடுகள் இனிது..

இவற்றை மீறி..

கடவுள் பகை..
இப்பகுத்தறிவு இனிது,
எதுவும் கடவுள்..
இப்பாவனைகள் இனிது..

மனிதர்
தொட்டவை இனிது...
தொடாமல் விட்டவை இனிது..

நேற்றினிது..நேற்றை பிடித்து திரியும் இன்றினிது..
இன்றை விழுங்கும் நாளை இனிது...

இவற்றை எல்லாம் தைத்த
கடவுள் கருணை இனிதினும் இனிது...

அவற்றை எல்லாம் இரட்சித்து வாழும்
மனித கருணை அதனினும் இனிது..

எழுதியவர் : சிவசங்கர்.சி (17-Nov-15, 8:59 pm)
பார்வை : 102

மேலே