தசாவதாரம்-ஒரு பக்க கதை- கவிஜி

சாய்பாபா காலனி, சிவனாந்தா காலனி, சிங்காநல்லூர், உக்கடம், கணபதி, சரவணம் பட்டி, ஒன்டிபுதூர், மலுமிச்சம்பட்டி, கணுவாய், பீளமேடு...இந்த பத்து இடத்திலயும் இருப்பேன், தசாவதாரம் மாதிரி.... நீ தான் புத்திசாலியான போலிஸ் ஆச்சே.... கண்டு பிடிடா பாக்கலாம்... இப்போ சொல்றேன்டா.. இந்த முறையும் நீ என்னை பிடிக்க முடியாது........ ஏன்னா..... எப்பவும்... நான் உன்ன விட ஒரு படி மேலடா.. என் நண்பனே........ தில் இருந்தா நீ மட்டும் வா.... வந்து என்னை கண்டு பிடி...ஏன்னா... இந்தப் பத்து இடத்திலயும் விநாயகர் கோயில் இருக்குடா.... சாமி முக்கியம் நண்பரே.... நாளைக்கு காலைல 10 மணிக்கு.....ரெடியா........ ஜூட்..... சொல்லிட்டு அடிக்கறது தான் என் ஸ்டைல்டா.. போலிஸ் நண்பனே....

ஜிந்தா....

கடிதம் படித்த மித்ரனால் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை....... ஜிந்தா, மித்ரனின் வாழ்நாளில்... மறக்கவே கூடாத, முடியாத அவனின் பால்ய நண்பன்.. ஒரே பள்ளிக் கூடம்....அருகருகே வீடு.. படிப்பு, விளையாட்டு, வினை.. எல்லாவற்றிலும் ஆள் மாறி ஆள் என்று நம்பர் ஒன்னுக்கான போட்டி அவர்களுக்குள் இருந்து கொண்டேயிருக்கும்...... காலத்தின் வசத்தில் மித்ரன் போலிஸ்.. ஜிந்தா கொள்ளைக்காரன்....போன முறை ஜிந்தா ஜெயித்தான்... இந்த முறை மித்ரன் ஜெயித்தே ஆக வேண்டும்...

மித்ரனின் மனம் ஆள் அற்ற தண்டவாளமாய் தடதடத்தது....

"சார்... பத்து இடம்தான..... பத்து இடத்திலயும் இருக்கற விநாயகர் கோயிலுக்கு போலிஸ் ப்ரோடேக்சன் குடுக்கலாம்... மாட்டிக்குவான் சார்...."

"இல்ல ரத்னம்... போலிஸ் இருக்கறது தெரிஞ்சா அவன் வரவே மாட்டான்... அதுதான் ஸ்பெசிபிக்கா என்னை மட்டும் கூப்டறான்..அவனுக்கு என்னை ஜெயிக்கணும்... சோ நான் தனியா போகற மாதிரி இருந்தா கண்டிப்பா வருவான்....அவன எனக்கு நல்ல தெரியும்... ஜெய்க்கறதுக்காக என்ன வேணாலும் செய்வான்....."

..................................................................................


"நானே போகணும் ரத்னம்... போய் அவன புடிச்சு, அடிச்சு ரோட் ரோடா... நாய இழுத்துட்டு வர்ற மாதிரி இழுத்துட்டு வந்தாதான் போலிசா இருக்கற என்னை எதுக்கற அந்த திமிருக்கு தீனி போட்ட மாதிரி இருக்கும்..."என்ற மித்ரனின் கண்கள் சிவந்து கிடந்தன...

"அப்டினா.. எப்டி சார்... பத்து இடம்... பத்துல, ஒரு இடத்துல இருக்கற விநாயகர் கோயிலுக்குக்கு கண்டிப்பா வருவான்... ஆனா, நீங்க எப்டி அந்த ஒரு இடத்தை கண்டு பிடிக்க முடியும்... நம்ம டீம் மப்டில ஒளிஞ்சிருந்து, அவன் எங்க வந்துருக்கான்னு கண்டு பிடிச்சு உங்களுக்கு சொன்னாலும், நீங்க அப்போ வேற இடத்துல இருந்தீங்கன்னா....அங்க இருந்து இந்த குறிப்பிட்ட இடத்துக்கு வரதுக்குள்ள அவன் போய்டுவான்... சோ ஹௌ சார்...?....எப்படி சாத்தியம்....?....."

ரத்னம் பேச பேச மித்திரன் யோசித்துக் கொண்டே கண்களை மூடினான்...

அடுத்த நாள் காலை 10 மணி....

சொன்னது போலவே ஒண்டிபுதூர் விநாயகர் கோயிலுக்குள் இருந்து பிடித்து வெளியே இழுத்து வரப்பட்ட ஜிந்தாவை அடித்து துவைத்து இழுத்து வந்தான் மித்ரன்...

எப்படி எப்படி.. எப்படி....?

அந்த எப்படி ஜிந்தாவுக்கும் இருந்தது...கேட்டும் விட்டான்.... எப்டிடா கண்டு பிடிச்ச ...............................?.........வாயிலேயே மிதித்தான் மித்திரன்...

"கெட்ட வார்த்தை பேசின....".............என்று சொல்லிக் கொண்டே பூட்ஸ் காலால் முகத்தை நசுக்கினான்....

ஜிந்தாவுக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது...

"சொல்லுடா.. எப்டிடா கண்டு பிடிச்ச....?"என்றான் மிகவும் அதிர்ந்தவனாக..... தான் தோற்று விட்ட வலி கோபமாய் வார்த்தையில் சத்தமாக வெளிப்பட்டது...

ரத்னம் உள்பட அனைவருக்குமே காவல் நிலையத்தில் அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான்....

"ஹ ஹஹா..... டேய்... ஜிந்தா.... நீ இங்கிலீஷ்ல எவ்ளோ பெரிய பருப்புன்னு எனக்கு தெரியுண்டா..... ஆனா ஒண்டிபுதூர்க்கு ஸ்பெல்லிங் ஏண்டா தப்பா எழுதின... அவ்ளோ நடுக்கமா... dக்கு பதிலா t...போட்ருக்க...."என்றபடியே நடந்து சென்று மீண்டும் ஒரு மிதி வைத்தான்.... மித்ரன்....

"போலிஸ்டா... பொறுக்கி இல்ல...."

கவிஜி

எழுதியவர் : கவிஜி (18-Nov-15, 4:49 pm)
பார்வை : 185

மேலே