ஹைக்கூ

அழுக்கான பூமியை
நன்றாய் குளிப்பாட்டியது
வான் மழை!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஓடும்நதி களைத்தது.
இதமாய் வீசி விட்டது
ஆற்றோர நாணல்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பரிதி முகங்காட்ட
கூம்பிய இதழ்விரித்துச் சிரித்தது
தண்ணீரில் தாமரை !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Nov-15, 10:01 am)
பார்வை : 448

மேலே