எழுதிக் குவிப்பதால்

எழுதிக் குவிப்பதால் வாழா கவிதை
படிப்பதால் மட்டுமேவா ழும்


யாப்போ புதிதோ எழுதிடு கற்பனை
தோற்கின் அவைநின் றிடா


சொல்பொருள் நல்லோசை நற்கருத்து தொல்யாப்பு
இல்லா மலும்கவிவெல் லும்

----கவின் சாரலன்

யாப்பு அறியாதாற்கும் திருக்குறள் பழக்கத்தால் இவை குறட்பா என்று
புரிந்துவிடும். யாப்பிலக்கணம் தெரிந்தோருக்கு சீர் தளை தொடை
அந்தர்யாமியாக இருப்பது புரியும்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Nov-15, 10:25 am)
பார்வை : 56

மேலே