எழுதிக் குவிப்பதால்
எழுதிக் குவிப்பதால் வாழா கவிதை
படிப்பதால் மட்டுமேவா ழும்
யாப்போ புதிதோ எழுதிடு கற்பனை
தோற்கின் அவைநின் றிடா
சொல்பொருள் நல்லோசை நற்கருத்து தொல்யாப்பு
இல்லா மலும்கவிவெல் லும்
----கவின் சாரலன்
யாப்பு அறியாதாற்கும் திருக்குறள் பழக்கத்தால் இவை குறட்பா என்று
புரிந்துவிடும். யாப்பிலக்கணம் தெரிந்தோருக்கு சீர் தளை தொடை
அந்தர்யாமியாக இருப்பது புரியும்