யௌவன நங்கை

நயனம்
••••••••
நங்கையின்
நயனவிழிதனில்
நாணம்
நடனமாடியதோ............
மங்கையவளின் மார்புதனில் நானும்
துயில் கொள்ளவரவோ........
அவள் மேனியில் வழியும் யௌவனம் கண்டு
யதார்த்தமாய் என் உயிர் தன்னில்
உணர்வு
ஊஞ்சலாடுகிறது.
வதனமதில் வளர்மதியாய் மின்னிடும் பொன்னகையாய்ப் புன்னகை......
பூத்துக் குளுங்குகிறதோ.......
அவள்.............
முகம். தன்னில்
இளமை தினமும் ஊஞ்சலாடுகிறது.....
உரிமையோடு நங்கையவள் மேனி தன்னில்
அவள் மேனி மிளிருமழகு கண்டு யானே
எனை மறந்து போகிறேன்
என்ன மாயமோ தெரியவில்லை
அவளில் த்தும்பும் அற்புத அழகு கண்டதால் தானோ....??????

எழுதியவர் : வெ.பூ.காவ்யாஞ்சலி (25-Nov-15, 10:53 am)
பார்வை : 150

மேலே