சென்ரியூக்கள் 19

நெற்பயிர்கள்
வானுயர்ந்து நின்றன
செல் கோபுரங்கள்

¦
கடந்த காலமோ
வருங்காலமோ
நம்பிக்கையில்லா கனவு

¦
வெடித்துக்காட்டி
நீதி கேட்கிறது மனசு
இடிந்த கரை

¦
கூட்டுக் குடும்பம்
முக்கியத்துவம் புரிந்தது
விவாகரத்து ஆன பின்

¦
பௌர்ணமி
நிலவுக்கு வழிபாடு
இரவு மின்தடை

எழுதியவர் : (25-Nov-15, 9:20 pm)
பார்வை : 93

மேலே