அவன் மௌன வார்த்தைகள் தந்த வரம் .......என் வாழ்க்கை

தொலைத்திருந்தேன் அன்பான தொல்லைகளை
இழந்து போயிருந்தேன் இணக்கங்களை
மறைந்து போயிருந்தேன் மதி மயக்கத்தில்
உருக்குலைந்திருந்தேன் உணர்வுகளில்

கரைந்து போயிருந்தேன் கனவுகளில்
சிதைந்து போயிருந்தேன் சிந்தைகளில்

வாழ்வில் ஒன்றும் இல்லை
ஏன் வாழ்ந்தேன் ,
எதற்கு வாழ்கிறேன்
இனியும் ஏன் வாழப்போகிறேன்.....

உண்மையாய்த் தெரியாது எனக்கு...!!!!


ஒருவன் வந்தான்
புன்னகை செய்தான்
என் வாழ்க்கையை
எனக்காக வாழ சொல்லித் தந்தான்
உறுதி அளித்தான்
"உன் புன்னகை தான் என் இன்பம் என்று"


இன்று என் வானமும் என் பூமியும் அவன் அன்பும் என் வசம்...!!!
அவன் என் அன்பின் வடிவம்
வாழ்வின் வண்ணம் ...!!!


" இன்றும் தேடி பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை என் நண்பர்கள் போல அழகான ஒரு உலகம்"

எழுதியவர் : சூர்யா ka (9-Jun-11, 3:53 pm)
பார்வை : 483

மேலே