சில கேள்விகள் சில ஐயங்கள்

ஒரு இரவில் ஒரு தெருவில்
நடந்து சென்றேன்
நாய்கள் குரைத்தன
நன்றியுடன் வாலாட்டும் நாய்கள்
குறைப்பது ஏன் ?

நான் அந்நியன் என்பதாலா ?

ஒரு புத்தகத்தை புரட்டிப் பார்த்தேன்
பொய்களுக்கு அழகாக சிறப்பாக
ஒப்பனை செய்து வைத்திருந்தனர் சிலர்

கவிதை என்பது இதுதானோ ?

ஒரு மலர்த் தோட்டத்தில் நுழைந்தேன்
"மலர்கள் மனதைப் பறிக்க
கையால் பறிக்க அல்ல "
என்று எழுதி வைத்திருந்தனர்
அப்படியானால்
மலர்களை தொடுப்பது எப்படி
மாலையாக்குவது எப்படி சூடுவது எப்படி ?
என்று ஐயங்கள் எழுந்தன !

ஒருவேளை இவர்கள் அழகுணர்வும் சரிதானோ ?

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (27-Nov-15, 9:30 am)
பார்வை : 82

மேலே