சில கேள்விகள் சில ஐயங்கள்
ஒரு இரவில் ஒரு தெருவில்
நடந்து சென்றேன்
நாய்கள் குரைத்தன
நன்றியுடன் வாலாட்டும் நாய்கள்
குறைப்பது ஏன் ?
நான் அந்நியன் என்பதாலா ?
ஒரு புத்தகத்தை புரட்டிப் பார்த்தேன்
பொய்களுக்கு அழகாக சிறப்பாக
ஒப்பனை செய்து வைத்திருந்தனர் சிலர்
கவிதை என்பது இதுதானோ ?
ஒரு மலர்த் தோட்டத்தில் நுழைந்தேன்
"மலர்கள் மனதைப் பறிக்க
கையால் பறிக்க அல்ல "
என்று எழுதி வைத்திருந்தனர்
அப்படியானால்
மலர்களை தொடுப்பது எப்படி
மாலையாக்குவது எப்படி சூடுவது எப்படி ?
என்று ஐயங்கள் எழுந்தன !
ஒருவேளை இவர்கள் அழகுணர்வும் சரிதானோ ?
~~~கல்பனா பாரதி~~~