வெள்ளைக் காதலி
இரவு நேரத்து இருள் வானம் நான்,
அதில் ஒளிரும் இன்ப நிலா நீ!
நிலா ஒளிர இருள் வேண்டும்;
இருள் சிறக்க நிலா வேண்டும்!!
இரண்டும் சேர்ந்தால் அன்றோ அழகு?
இரவின்றி நிலவின் ஒளி இல்லை,
நிலவின்றி இரவுக்கு அழகில்லை !
என்னில் நீயும்,
உன்னில் நானும்,
சேர்ந்தே ஒளிர்வோம் எப்பொழுதும்!!