வரம் தந்த ரணம்

தொடுகை
எறும்பு ஊரும் பாதை
போலவே தூரமானவைதான்,,,,
*****
கோடி நிலாக்களுக்கு
நடுவில் உடைந்த
சூரியனாய் நான்,,,,,
*****
சத்தமிட்டு
அழத்தெரியாதவன்தான்
இருப்பினும், இமைகள்
உடைந்து வடியும்,,,,
****
நிழல்களோடு பேசும்
அந்த நொடியும்
சுகமாய்த்தான் இருந்தது
அம்மாவோடு அருகிலுருந்த
வரையிலும்,,,,,,
*****
திரையிட்ட பாதைகளை
கடக்கும் மனதில்
மரணித்த பொழுதின்
விம்பம் விழிகளிலே கீறும்
அடையாளங்கள் ஆயிரம்,,,,,
*****
விலங்கிடப்பட்ட உயிரின்
பக்கங்கள் தேடுகிறேன்,
நம்பிக்கையான
பாதை என்று என்னயே
பாதங்கள் பயணிக்கிறது,,,,
*****
புதிய முகம்,
புதிய மொழி,
புதிய உறவு,
புதிய வேதனையும்
பார்க்கிறேன்,,,,
****
உடைந்தது போன
மேகக்கூட்டங்கள் போலவே
ஒரு யுகம் புதைகிறது,,,,
*****
கனவுகளை
உடைத்துச்செல்கிறது
விடியலும் கூட,
அவளோடு கலந்து பேசிய
நாட்களும் மறந்து போனது,,,,
******
உறவுகளோடு நடந்து
செல்லும் காலமும்
சொல்கிறது கடந்து
சென்ற நிமிடங்களின்
அருகாமை பற்றி,,,,,

- இபானு -

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (9-Dec-15, 7:25 pm)
பார்வை : 77

மேலே