கருவறை குழந்தை

என் பிள்ளை நீதானே
எப்பொழுது நீ வருவாய்!

வருவதற்கு ஒன்றுமில்லை
வாழ்வெல்லாம் வசதிதானே !

ஈரைந்து மாதத்திலே
இன்னோர் உலகை நீ காண்பாய்!

இந்த உலகம் போதுமம்மா
இதமாய் தானே இருக்கிறேனே !

உண்ண உணவும் நான் தாரேன்
உடுத்த உடையும் நான் தாரேன் !

உணவும் உடையும் தேவைஇல்லை
உற்சாகத்தில் நான் இருக்கேன்!

சொந்தம் பந்தம் காத்திருக்கு
சோறும் பாலும் ஊட்டிடவே!

சொந்தம் பந்தம் எல்லாமே
சொல்வதொன்றும் புரியலையே !

உன்னை போன்ற பலருண்டு
ஓடி ஆட விளையாட!

என்னைப்போன்ற பலருண்டா!
எப்பொழுது நான் வருவேன் ?

எழுதியவர் : hajamohinudeen (15-Dec-15, 6:29 pm)
பார்வை : 326

மேலே