இயற்கை சொன்ன உண்மை --- தரவு கொச்சகக் கலிப்பா

வெள்ளத்தைத் தடுக்காத வெறுமையான மனிதர்கள்
கள்ளத்தா லரண்மனைகள் கதியெனவே இருக்கின்றார் .
உள்ளத்தா லுணராம லுலகோங்கி நதிகளையும்
பள்ளமாகப் பிரித்தெடுத்துப் பலர்கண்ணீர் வடிக்கின்றார் .


எனவே

நதியின் போக்கை நாடியும் நடுவிலே
விதியின் பேரில் வீட்டைக் கட்டுதல்
மதியென நினைத்ததை மறுத்திட உலகிலும்
கதியென உரைத்த காட்சியில்
விதியும் விஞ்சிடும் விரைந்த வெள்ளமே !


( நேரிசை ஆசிரியச் சுரிதகம் )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Dec-15, 2:00 am)
பார்வை : 66

மேலே